‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மழைநீர் வடிகால் பணிகள் 15 முதல் 30 நாள்களில் நிறைவடையும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

மழைநீர் வடிகால் பணிகள் 15 முதல் 30 நாள்களில் அனைத்து பணிகளும் நிறைவடையும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :8 அக்டோபர் 2022, 7:49 am

DIN

மழைநீர் வடிகால் பணிகள் 15 முதல் 30 நாள்களில் அனைத்து பணிகளும் நிறைவடையும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது:

சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் திருப்தி தருகின்றன. தென்சென்னையில் கடந்த வாரம் ஆய்வு செய்தேன். 70% முதல் 80% பணிகள் முடிந்து உள்ளன.

வடசென்னை பகுதியில் இன்று காலை முதல் பணிகளை பார்வையிட்டேன். அவ்வபோது மழை பெய்து வருவதால் பணிகள் பாதிக்கப்படுகின்றன.

பெருமழையை எதிர்கொள்ளும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. எப்படிப்பட்ட மழை பெய்தாலும் அதை சமாளிக்கக் கூடிய பணிகள் நடைபெற்று வருகின்றன. மழை தேங்கினாலும் உடனியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.