தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பொங்கலுக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் : அமைச்சர் முத்துசாமி

பொங்கல் பண்டிகைக்குள் திறந்து, மக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி கூறினார்.

News image

பொங்கலுக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் : அமைச்சர் முத்துசாமி

Updated On :13 அக்டோபர் 2022, 10:57 am

DIN


சென்னை: வண்டலூர் அருகே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை, பொங்கல் பண்டிகைக்குள் திறந்து, மக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி கூறினார்.

பண்டிகைக் காலங்களில் சென்னை கோயம்பேட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளை, வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கும் வகையில் சுமார் 400 கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கத்தில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டிருக்கும் இந்த பேருந்து நிலையம், கடந்த 2019ஆம் தேதி பணி துவங்கப்பட்டு, 2022ஆம் ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டுமானப் பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், முன்னதாக, பேருந்து நிலையத்தை வரும் பிப்ரவரி மாதம் திறக்க திட்டமிடப்பட்டிருந்தது. இது குறித்து அமைச்சர் முத்துசாமி தகவல்களை வெளியிட்டிருந்தார்.

ஆனால், தற்போது பொங்கல் பண்டிகைக்குள் பேருந்து நிலையத்தைத் திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட்டால், பொங்கல் பண்டிகையின்போது ஏற்படும் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படும் என்பதால், பொங்கல் பண்டிகைக்குள் பேருந்து நிலையத்தைத் திறக்க திட்டமிடப்பட்டிருப்பதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

புதிய பேருந்து நிலையத்திற்கான அடிப்படை கட்டுமானப் பணிகள் முடிந்துவிட்டன. அதன் பயன்பாட்டு வசதிகள், பூச்சு வேலை, மின்சார இணைப்பு உள்ளிட்ட பணிகள்தான் நிலுவையில் உள்ளன. அவையும் இன்னும் ஓரிரு மாதங்களில் முடிக்கப்பட்டுவிட்டால் ஜனவரி மாதமே புதிய பேருந்து நிலையம் திறக்கப்படலாம் என்பதால் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் மக்கள் இந்த முறை போக்குவரத்து நெரிசலில் சிக்கும் அபாயத்திலிருந்து தப்பிக்கலாம் என்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.