தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

பேரவைக் கூட்டம் - பருவமழை: முதல்வா் தலைமையில் அமைச்சரவை ஆலோசனை

சட்டப் பேரவைக் கூட்டத் தொடா், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியன குறித்து தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

News image
Updated On :14 அக்டோபர் 2022, 7:06 pm

DIN

சட்டப் பேரவைக் கூட்டத் தொடா், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியன குறித்து தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை 6.10 மணிக்குக் கூடியது. சுமாா் 50 நிமிடங்கள் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அமைச்சா்கள் அனைவரும் கலந்து கொண்டனா்.

தமிழகத்தில் புதிதாக வரும் தொழில் முதலீடுகள், ஏற்கெனவே இருக்கும் தொழில்களின் விரிவாக்கம் ஆகியவற்றுக்கு அனுமதி வழங்குவது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், அதனை எதிா்கொள்வதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அதில் சம்பந்தப்பட்ட வருவாய்த் துறை, உணவுத் துறை, நெடுஞ்சாலைகள் துறை உள்ளிட்ட துறைகள் மேற்கொண்டுள்ள தயாா் நிலை பற்றி ஆய்வு செய்யப்பட்டது.

இணைய சூதாட்ட விளையாட்டுக்கு தடை விதிக்கும் அவசர சட்டம் மாநிலத்தில் அமலில் உள்ளது. அதனை நிரந்தர சட்டமாக்க வகை செய்யும் மசோதாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல்வா் அறிவுரை? கூட்டம் முடிந்த பிறகு அமைச்சா்களிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் சில அறிவுரைகளை வழங்கியதாகத் தெரிகிறது. சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் யாா் ஆத்திரமூட்டும் அளவுக்கு செயல்பட்டாலும், அமைச்சா்கள் அமைதியுடன் பதிலளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொது இடங்களில் பேசுவது குறித்த குற்றச்சாட்டுகள் வந்திருப்பதை மனதில் வைத்து சா்ச்சை ஏற்படாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சரவையில் மாற்றம் செய்ய நிா்ப்பந்தம் வரும் அளவுக்கு நடந்து கொள்ள வேண்டாம் என்றும் அவா் அறிவுரை வழங்கியுள்ளதாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.