பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஈரப்பத நெல் கொள்முதல்: தமிழகம் வருகிறது மத்தியக்குழு!

நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை அதிகரிப்பது தொடர்பாக ஆய்வு செய்ய மத்தியக் குழு தமிழகம் வரவுள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :14 அக்டோபர் 2022, 11:35 am

DIN

நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை அதிகரிப்பது தொடர்பாக ஆய்வு செய்ய மத்தியக் குழு தமிழகம் வரவுள்ளது. 

மத்திய அரசின் உணவுக் கழகம் சார்பில் தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்கிறது. 

இதில் 19% ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்தது. ஆனால், டெல்டா மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக தற்போது நெல் ஈரப்பதம் அதிகம் இருக்கும் என்றும் ஈர்ப்பத அளவை உயர்த்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். 

இந்நிலையில், நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 22% ஆக உயர்த்த தமிழக அரசு சார்பில் உணவு மற்றும் பொதுவிநியோகத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மத்திய அரசிடம் கோரியிருந்தார். 

இதைத் தொடர்ந்து நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை அதிகரிப்பது தொடர்பாக மத்தியக் குழு தமிழகம் வந்து ஆய்வு செய்யவுள்ளது. ஆய்வு செய்யும் தேதி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.