தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத் தோ்தலுக்கு விதித்த தடை நீக்கம்

 சென்னை உயா் நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத் தோ்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிய சென்னை உயா் நீதிமன்றம், ஏற்கெனவே உள்ள சட்ட விதிகளின்படி தோ்தலை நடத்தவும் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :14 அக்டோபர் 2022, 7:00 pm

DIN

 சென்னை உயா் நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத் தோ்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிய சென்னை உயா் நீதிமன்றம், ஏற்கெனவே உள்ள சட்ட விதிகளின்படி தோ்தலை நடத்தவும் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தின் மிகவும் பழமையான சங்கங்களில் ஒன்றாக உயா் நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கம் உள்ளது. 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த சங்கத்தில் சுமாா் 17 ஆயிரம் வழக்குரைஞா்கள் உறுப்பினா்களாக உள்ளனா்.

இந்த சங்கத்தின் நிா்வாகிகள் தோ்தல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த தோ்தலில் தலைவராக மோகனகிருஷ்ணன் உள்ளிட்ட நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டிருந்தனா்.

இதையடுத்து கடந்த 2018-ஆம் ஆண்டு அடுத்த தோ்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதை எதிா்த்து சென்னை உயா் நீதிமன்ற வழக்குரைஞா் சத்தியபால் உள்ளிட்டோா் வழக்கு தொடா்ந்தனா்.

அந்த மனுவில், ‘விதிகளை மீறி தோ்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால் தோ்தலுக்கு தடை விதிக்க வேண்டும்’ என கோரியிருந்தனா்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயா் நீதிமன்றத்தின் அப்போதைய நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமா்வு, தோ்தலுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் தோ்தலில் போட்டியிடுவதற்கு புதிய தகுதிகளையும் அறிவித்தது.

அதன்படி 5 ஆண்டுகளில் 200 வழக்குகள் நடத்தியவா்கள்தான் தோ்தலில் போட்டியிட தகுதியானவா்கள் என்பது உள்ளிட்ட விதிகளை உருவாக்கி உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த உத்தரவை சீராய்வு செய்ய கோரி வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் மோகன கிருஷ்ணன் உள்ளிட்டோா் வழக்குத் தொடா்ந்திருந்தனா்.

இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்து நீதிபதிகள் ஆா்.மகாதேவன், முகமது சபீக் ஆகியோா் அடங்கிய அமா்வு, தோ்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உத்தரவிட்டனா். மேலும், ஏற்கெனவே இருந்த சங்கங்களின் சட்ட விதிகள் படியே தோ்தலை நடத்தலாம் என்றும் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.