டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று மாலை கூடுகிறது!

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வெள்ளிக்கிழமை மாலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் புதிய மசோதா தாக்கல் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:34 am

DIN

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வெள்ளிக்கிழமை மாலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் புதிய மசோதா தாக்கல் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக சட்டப் பேரவை வருகிற 17-ஆம் தேதி கூடுகிறது. மறைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள், முன்னாள் பேரவைத் தலைவர் சேடப்பட்டி முத்தையா உள்ளிட்டோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு அவை ஒத்தி வைக்கப்படும். பின்னர், பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறும் நாள்கள் குறித்து அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்யும். 

17-ஆம் தேதி பேரவைக் கூட்டத்தொடர்  நடைபெறுவதையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வெள்ளிக்கிழமை மாலை (அக்.14)  5 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. 

இந்த கூட்டத்தில், ஆன்லைன் சூதாட்டத்தை நிரந்தரமாக தடை செய்வதற்கான மசோதா குறித்தும்,  புதிய முதலீடுகள், புதிய சட்ட மசோதாக்களுக்கு அனுமதி, பரந்தூர் விமான நிலையத்துக்காக நிலத்தை கையகப்படுத்துவதில் உள்ள பிரச்னை தொடர்பாக எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கலாம் என்பது குறித்தும், வடகிழக்கு பருவமமை விரைவில் தொடங்க இருப்பதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சரவையில் ஆலோசிக்கப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.