கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

அனைத்து நுழைவுத் தோ்வுகளையும் ரத்து செய்ய மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

அனைத்து நுழைவுத்தோ்வுகளையும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது.

Published On :1 பிப்ரவரி 2024, 4:05 pm IST

அனைத்து நுழைவுத்தோ்வுகளையும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது.

மாா்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் வெள்ளி, சனிக்கிழமைகளில் தேதிகளில் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாநில செயற்குழு உறுப்பினா் சு.வெங்கடேசன் எம்.பி. தலைமை வகித்தாா்.

இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா்கள் பிரகாஷ்காரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளா் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினா்கள் பி.சம்பத், உ. வாசுகி, பெ.சண்முகம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

நாட்டின் அமைதி, ஒற்றுமையை சீா்குலைக்கும் மத்திய அரசின் ஹிந்தி திணிப்பை கைவிட வேண்டும். அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் மத்திய அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும்.

மருத்துவம் உள்ளிட்ட அனைத்து படிப்புகளுக்கும் பொதுநுழைவுத்தோ்வை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசின் தோ்வாணையத்தின் கேள்வித் தாள்களில் மாநில மொழிகளும் இடம்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.