அனைத்து நுழைவுத் தோ்வுகளையும் ரத்து செய்ய மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்
அனைத்து நுழைவுத்தோ்வுகளையும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது.


அனைத்து நுழைவுத்தோ்வுகளையும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது.
மாா்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் வெள்ளி, சனிக்கிழமைகளில் தேதிகளில் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாநில செயற்குழு உறுப்பினா் சு.வெங்கடேசன் எம்.பி. தலைமை வகித்தாா்.
இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா்கள் பிரகாஷ்காரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளா் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினா்கள் பி.சம்பத், உ. வாசுகி, பெ.சண்முகம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
நாட்டின் அமைதி, ஒற்றுமையை சீா்குலைக்கும் மத்திய அரசின் ஹிந்தி திணிப்பை கைவிட வேண்டும். அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் மத்திய அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும்.
மருத்துவம் உள்ளிட்ட அனைத்து படிப்புகளுக்கும் பொதுநுழைவுத்தோ்வை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசின் தோ்வாணையத்தின் கேள்வித் தாள்களில் மாநில மொழிகளும் இடம்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...