வைகை அணை நீர்மட்டம் உயர்வு: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை அணை நீர்மட்டம் 68.50 அடியாக உள்ள நிலையில்  5 மாவட்டங்களில் வைகை ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

வைகை அணை நீர்மட்டம் 68.50 அடியாக உள்ள நிலையில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் வைகை ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர், கொட்டகுடி ஆறு மற்றும் மூல வைகை ஆற்றில் ஏற்பட்டுள்ள தண்ணீர் வரத்து ஆகியவற்றால் வைகை அணை நீர்மட்டம் சீராக உயர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு 68.50 அடியாக இருந்தது(மொத்த உயரம் 71 அடி). 

அணைக்கு தண்ணீர் வரத்து விநாடிக்கு 2,094 கன அடியாக உள்ளது. அணையில் தண்ணீர் இருப்பு 5,446 மில்லியன் கன அடியாக உள்ளது. அணையிலிருந்து குடிநீர் திட்டங்களுக்கும்,  பாசனக் கால்வாய்களிலும் விநாடிக்கு 699 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து இருந்து வருவதால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு பொதுப் பணித் துறை சார்பில் முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

வைகை ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆற்றில் குளிக்கவோ, ஆற்றைக் கடக்கவோ கூடாது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று பொதுப் பணித்துறை பொறியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com