எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தில்லியில் 11 எலக்ட்ரிக் சார்ஜிங் நிலையங்களை திறந்துவைத்தார் கேஜரிவால்!

தேசிய தலைநகரில் அடுத்த 2 மாதங்களில் 100 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார். 

News image
Updated On :18 அக்டோபர் 2022, 9:46 am

DIN

தலைநகர் தில்லியில் 11 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இன்று திறந்துவைத்தார்.

திறந்துவைத்து அவர் பேசுகையில், 

தேசிய தலைநகரில் அடுத்த 2 மாதங்களில் 100 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும். முன்னதாக இன்று 11 சார்ஜிங் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதில் பேட்டரி மாற்றும் வசதிகளும் அடங்கும் என்றார்.

முன்னதாக பேட்டரி மாற்றும் இடங்களும், மின்சார வாகனங்கள் சார்ஜிங் செய்யப்படும் நிலையங்களும் தனித்தனியாக இருந்தன. தற்போது இவை ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. தற்போது திறக்கப்பட்டுள்ள 11 சார்ஜிங் நிலையங்களில், 73 சார்ஜிங் பயின்ட்கள் உள்ளன. 

ஆகஸ்ட் 2020இல் அறிமுகப்படுத்தப்பட்ட லட்சிய மின்சார வாகனக் கொள்கை 2024ஆம் ஆண்டுக்குள் மின்சார வாகனங்களின் பங்கை மொத்த விற்பனையில் 25 சதவீதமாக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.