ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

சபரிமலை ஐயப்பன் கோயில் மேல் சாந்தியாக ஜெயராம் நம்பூதிரி தேர்வு!

சபரிமலை ஐயப்பன் கோயில் புதிய மேல் சாந்தியாக ஜெயராம் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

News image
Updated On :18 அக்டோபர் 2022, 6:27 am

DIN


சபரிமலை ஐயப்பன் கோயில் புதிய மேல் சாந்தியாக ஜெயராம் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதேபோல் மாளிகை புறத்தம்மன் மேல் சாந்தியாக ஹரிகரன் நம்பூதிரி தேர்வாகியுள்ளார். 

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. ஒரு வருடத்திற்கான புதிய மேல் சாந்தியை தேர்வு செய்யும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. 

அதைத்தொடர்ந்து, தேர்வு செய்யப்பட்ட புதிய மேல் சாந்தியாக ஜெயராம் நம்பூதிரி கோயில் நடையைத் திறந்துவைத்து பூஜை செய்தார். தொடர்ந்து 5 நாள்கள் கோயில் நடை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் 22-ம் தேதி வரை ஐயப்பனை தரிசிக்கப் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.