சபரிமலை ஐயப்பன் கோயில் மேல் சாந்தியாக ஜெயராம் நம்பூதிரி தேர்வு!
சபரிமலை ஐயப்பன் கோயில் புதிய மேல் சாந்தியாக ஜெயராம் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


சபரிமலை ஐயப்பன் கோயில் புதிய மேல் சாந்தியாக ஜெயராம் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதேபோல் மாளிகை புறத்தம்மன் மேல் சாந்தியாக ஹரிகரன் நம்பூதிரி தேர்வாகியுள்ளார்.
ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. ஒரு வருடத்திற்கான புதிய மேல் சாந்தியை தேர்வு செய்யும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து, தேர்வு செய்யப்பட்ட புதிய மேல் சாந்தியாக ஜெயராம் நம்பூதிரி கோயில் நடையைத் திறந்துவைத்து பூஜை செய்தார். தொடர்ந்து 5 நாள்கள் கோயில் நடை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் 22-ம் தேதி வரை ஐயப்பனை தரிசிக்கப் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...