விழிப்புணர்வு முகாம் செங்கல்பட்டு-திருக்கழுக்குன்றம் நான்கு சாலை சந்திப்பில் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் நாராயணசாமி விழிப்புணர்வு பேரணியைக் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார். துணை முதல்வர் அனிதா, மருத்துவ கண்காணிப்பாளர் செல்வம், மகப்பேறு மருத்துவத் துறையின் தலைவர் பே.டாக்டர் வெங்கடேஸ்வரி மற்றும் துறை சார்ந்த மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள், செவிலிய மாணவர்கள் முன் களப் பணியாளர்கள் பேரணியில் கலந்து கொண்டு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பாதாகைகளை ஏந்திய வண்ணம் விழிப்புணர்வு முழக்கங்களையும் முழக்கமிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்து ஊர்வலமாகச் சென்றனர். பேரணி மகப்பேறு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவில் முடிவடைந்தது.