தூய்மைப் பணியாளர்களுக்கு ஓய்வறை: தலைமைச் செயலாளர் உத்தரவு!

அனைத்து அரசு அலுவலகங்களிலும் தூய்மைப் பணியாளர்களுக்கு  ஓய்வறை அமைக்க தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு
தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு
Published on
Updated on
1 min read

அனைத்து அரசு அலுவலகங்களிலும் தூய்மைப் பணியாளர்களுக்கு  ஓய்வறை அமைக்க தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். அரசு மருத்துவமனைகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு  ஓய்வறை அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

அனைத்து அரசு அலுவலகங்களிலும் தூய்மைப் பணியாளர்கள் அமர்ந்து இளைப்பார, உணவருந்த போதிய வசதிகளை ஏற்படுத்தி தர தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

அரசு அலுவலக தலைமை அலுவலர்கள் மூலம் வசதிகளை செய்து தந்து புகைப்படங்களுடன் அறிக்கை அனுப்ப ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்  உத்தரவிட்டுள்ளார்.

அனைத்து அரசு அலுவலங்களிலும் பொதுமக்களுக்காக கழிவறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதிய கடிதத்தில் தலைமைச் செயலாளர் வலுயுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com