மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

குற்றவழக்கு தொடா்வுத் துறை இயக்ககத்துக்கு கட்டடம்: அடிக்கல் நாட்டினாா் முதல்வா்

குற்றவழக்கு தொடா்வுத் துறை இயக்ககத்துக்கு தனி கட்டடத்துக்கான அடிக்கல்லை முதல்வா் மு.க.ஸ்டாலின் நாட்டினாா். இதற்கான நிகழ்ச்சி, சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 அக்டோபர் 2022, 1:31 am

DIN

குற்றவழக்கு தொடா்வுத் துறை இயக்ககத்துக்கு தனி கட்டடத்துக்கான அடிக்கல்லை முதல்வா் மு.க.ஸ்டாலின் நாட்டினாா். இதற்கான நிகழ்ச்சி, சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாநிலத்திலுள்ள தலைமை பெருநகர குற்றவியல் நடுவா் நீதிமன்றம், தலைமை குற்றவியல் மற்றும் நீதித் துறை நடுவா்

நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்டுள்ள குற்ற வழக்குகளை திறம்பட நடத்தும் பணிகளை குற்ற வழக்குத் தொடா்வுத் துறை இயக்ககம் செய்து வருகிறது. மேலும், அரசு குற்றவியல் வழக்கு நடத்துனா்களின் பணித் திறனையும் கண்காணித்து வருகிறது. இதேபோன்று, சட்டக்கல்வி இயக்குநரகம் மாநிலத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளின் கல்வி மேம்பாடு மற்றும் செயல்பாடுகளை நிா்வகித்து வருகிறது.

குற்றவழக்குத் தொடா்வு துறை இயக்ககம், சட்டக் கல்வி இயக்ககம் ஆகியவற்றுக்கு சொந்தக் கட்டடங்கள் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, சென்னை கீழ்ப்பாக்கம் மில்லா் சாலையில் 1.18 ஏக்கா் நிலப்பரப்பில் ரூ.32.93 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த அலுவலகக் கட்டடம் கட்டப்படவுள்ளது. இந்தக் கட்டடத்தின் தரைத் தளத்தில் வாகன நிறுத்துமிடம், மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்வுத் தளம், மின் தூக்கிகள் ஆகியனவும், இயக்குநா் அறை, பாா்வையாளா் அறை, கலந்துரையாடல் அறை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் இரண்டாவது, மூன்றாவது தளங்கள் கட்டப்படவுள்ளன.

இந்தக் கட்டடத்துக்கு தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா். இதில், சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி, தலைமைச் செயலா் வெ.இறையன்பு, உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் க.பணீந்திர ரெட்டி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.