தமிழகத்தில் பட்டாசு விபத்தால் 500 பேர் காயம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் பட்டாசு தீ விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்(கோப்புப்படம்).
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்(கோப்புப்படம்).

தமிழகத்தில் பட்டாசு தீ விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் முழுவதும் தீபாவளியன்று வெடி வெடித்ததால் ஏற்பட்ட விபத்துகளில் சுமார் 500 பேர் காயமடைந்தனர். 179 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்ட நிலையில் 345 பேர் புறநோயாளிகளாக சிகிச்சைப் பெற்று திரும்பினர்.

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பட்டாசு தீ விபத்தில் ஏற்படும் காயங்களுக்கு சிகிச்சை தர தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com