இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கோவை கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி: கேட்பாரற்று நிற்கும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!

கோவை கார் வெடித்த சம்பவத்தின் எதிரொலியாக கேட்பாரற்று நிற்கும் இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். 

News image
நீண்ட நாள்களாக கேட்பாரற்று நிற்கும் வாகனங்களை பறிமுதல் செய்து கொண்டுச் செல்லும் போக்குவரத்து காவலர்கள்.
Updated On :28 அக்டோபர் 2022, 8:36 am

DIN

கோவை கார் வெடித்த சம்பவத்தின் எதிரொலியாக கேட்பாரற்று நிற்கும் இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். 

கோவையில் கடந்த 23 ஆம் தேதி டவுன்ஹால் பகுதியில் அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்த சம்பவம் பெறும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்தான விசாரணையில் தற்பொழுது வரை ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்தான விசாரணை தற்போது என்ஐஏ விசாரணைக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Story image

மெக்கானிக் ஷாப் கடைகளில் நீண்ட நாள்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை கணக்கெடுக்கும் காவல்துறையினர்.

இந்நிலையில், கோவை மாநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். 

அதன்படி, கோவை மாநகரில் நீண்ட நாள்களாக கேட்பாரற்று நிற்கும் கார்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. 

கேட்பாரற்று நிற்கும் கார்களின் உரிமையாளர்களை தொடர்பு கொண்டு கார்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. 

உரிமையாளர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் காவல்துறையினர் அந்த கார்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

Story image

கோவை மாநகரில் நீண்ட நாள்களாக கேட்பாரற்று நிற்கும் வாகனங்களை பறிமுதல் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து காவலர்கள்.

இந்நிலையில், நீண்ட நாள்களாக கேட்பாரற்று நிற்கும் இருசக்கர வாகனங்களையும் போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.

சதி வேலைகளுக்காக காரை பயன்படுத்தியது போல இரு சக்கர வாகனங்களையும் பயன்படுத்தலாம் என்ற கோணத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதே சமயம் உக்கடம் பகுதியில் உள்ள மெக்கானிக் ஷாப் கடைகளிலும் நீண்ட நாள்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள  வாகனங்களையும் காவல்துறையினர் கணக்கெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.