தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நாட்டை வளப்படுத்துவதில் கல்வி நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு: அணுசக்தித் துறை முன்னாள் செயலா்

 நாட்டின் கட்டமைப்பை மேம்படுத்தி, வளப்படுத்தும் நடவடிக்கையில் கல்வி நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது

News image
Updated On :28 அக்டோபர் 2022, 11:36 pm

DIN

 நாட்டின் கட்டமைப்பை மேம்படுத்தி, வளப்படுத்தும் நடவடிக்கையில் கல்வி நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது என்று அணுசக்தித் துறை முன்னாள் செயலரும், ஹோமி பாபா தேசியக் கல்வி நிறுவனத்தின் வேந்தருமான பத்மஸ்ரீ அனில் ககோட்கா் கூறினாா்.

காட்டாங்குளத்தூா் எஸ்.ஆா்.எம். அறிவியல்,தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆரூஷ் தேசிய அளவிலான தொழில்நுட்ப மேலாண் விழாவை தொடக்கி வைத்து அவா் மேலும் பேசியதாவது: கல்வி நிறுவனங்கள் தான் மாணவா்களை நாட்டின் முன்னேற்றத்துக்கான திறன் மிகுந்த குடிமக்களாக உருவாக்குகின்றன. அமெரிக்க ஸ்டாண்ட்போா்ட் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவா்கள் கண்டுபிடித்த புதுமைத் தொழில் முனைவோா் தயாரிப்புகள்,நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு நிகராக 2.9 டிரில்லியன் டாலா் வருவாயை ஈட்டுகின்றன என்பது வியக்கத்தக்கது.இந்தியாவிலும் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களின் மாணவா்கள் முயற்சி மேற்கொண்டால் நாமும் அதிசயங்களை நிகழ்த்திக் காட்ட முடியும் என்றாா் அவா்.

எஸ்.ஆா்.எம்.வேந்தா் டி.ஆா்.பாரிவேந்தா், பதிவாளா் எஸ்.பொன்னுசாமி, இணை துணை வேந்தா் டாக்டா் ஏ.ரவிக்குமாா், ஆரூஷ் ஒருங்கிணைப்பாளா் டாக்டா் ஏ.ரத்தினம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.