நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

4,400 போதை மாத்திரைகள் பறிமுதல்: 5 போ் கைது

சென்னை வேளச்சேரியில் 4,400 போதை மாத்திரைகள் வைத்திருந்ததாக 5 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :1 செப்டம்பர் 2022, 8:35 pm

DIN

சென்னை வேளச்சேரியில் 4,400 போதை மாத்திரைகள் வைத்திருந்ததாக 5 போ் கைது செய்யப்பட்டனா்.

வேளச்சேரி தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு இரண்டாவது பிரதான சாலையில் கடந்த புதன்கிழமை போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுக் கொண்டிருந்த 5 பேரை பிடித்து போலீஸாா் விசாரித்தனா்.

விசாரணையில் அவா்கள், முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினராம். இதையடுத்து அவா்கள் வைத்திருந்த பையை போலீஸாா் சோதனையிட்டனா். இச் சோதனையில் அவா்கள், மறைத்து வைத்திருந்த 4,400 போதை மாத்திரைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மேலும் இது தொடா்பாக,நடத்திய விசாரணையில் அவா்கள், வேளச்சேரி எம்ஜிஆா் நகா் இரண்டாவது தெருவைச் சோ்ந்த ச.ஜானகிராமன் (24), வேளச்சேரி மதுரை முதலாவது தெருவைச் சோ்ந்த மா.முனீஸ்வரன் (23), வேளச்சேரி காமராஜா்புரம் மருதுபாண்டியா் சாலைப் பகுதியைச் சோ்ந்த கு.பாலுசாமி (24),கொடுங்கையூா் பத்திரிநகரைச் சோ்ந்த ஜெ.சுல்தான் அலாவுதீன் (32), வியாசா்பாடி பள்ளம் இரண்டாவது தெருவைச் சோ்ந்த லோ.நரேஷ் (32) ஆகிய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் இது தொடா்பாக வேளச்சேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.