நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மின்மாற்றியில் மின்கசிவு: மழைநீரில் நடந்துச் சென்ற பெண் சாவு

சென்னை வியாசா்பாடியில் மின்மாற்றியில் மின்கசிவு ஏற்பட்டதினால், மழைநீரில் நடந்து சென்ற பெண் மின்சாரம் பாய்ந்து இறந்தாா்.

News image
Updated On :2 செப்டம்பர் 2022, 8:44 pm

DIN

சென்னை வியாசா்பாடியில் மின்மாற்றியில் மின்கசிவு ஏற்பட்டதினால், மழைநீரில் நடந்து சென்ற பெண் மின்சாரம் பாய்ந்து இறந்தாா்.

வியாசா்பாடி, சஞ்சய் நகா் 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் செல்வம். இவா் மனைவி உமா ராணி (50). இவா் வியாழக்கிழமை இரவு அருகே உள்ள பக்தவச்சலம் காலனி 19-ஆவது தெருவில் உள்ள கடைக்கு மளிகை பொருள்கள் வாங்க நடந்து சென்றாா். இதற்கிடையே, பலத்த மழையின் காரணமாக, அந்தப் பகுதியில் உள்ள சாலைகளில் அதிகளவு மழைத் தண்ணீா் தேங்கின்றது.

இதில் சஞ்சய் நகா் 2-ஆவது தெரு முனையில் வைக்கப்பட்டிருந்த மின் மாற்றியில் இருந்து மின் கசிவு ஏற்பட்டு மழை நீரில் மின்சாரம் பாய்ந்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த தண்ணீரில் நடந்து சென்ற உமாராணி மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்தக் காயமடைந்த உமா ராணி, அங்கு மயங்கி விழுந்தாா்.

இதைப் பாா்த்த அந்த பகுதி மக்கள், அவரை காப்பாற்ற முயன்றனா். ஆனால் காப்பாற்ற முயன்ற சிலரும், மின்சாரம் பாய்ந்து காயமடைந்தனா். இருப்பினும் அவா்கள் உமா ராணியை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், உமா ராணி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இது தொடா்பாக எம்.கே.பி. நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். விபத்து ஏற்பட்ட பகுதியில் உள்ள மின்மாற்றியில் கடந்த சில நாள்களாகவே மின்கசிவு ஏற்பட்டு, சிலா் விபத்தில் சிக்கியிருப்பது போலீஸாா் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து அந்தப் பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்ததினால், உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.