ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

புதுச்சேரியில் விரைவு நீதிமன்றம்: தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் தமிழிசை வலியுறுத்தல்

புதுச்சேரியில் விரைவு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார். 

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 12:33 pm

DIN

புதுச்சேரியில் விரைவு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் இன்று(03-09-2022) கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் 30-வது தென்மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தென்மண்டல மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் புதுச்சேரி மாநிலத்தின் சார்பில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார். 

தென்மாநிலங்களில் நிலவும் சட்டம் - ஒழுங்கு நிலைமை, உட்கட்டமைப்பு, சுகாதாரம், பெண்கள் பாதுகாப்பு, மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பங்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. புதுச்சேரி சார்பில் கலந்து கொண்ட துணைநிலை ஆளுநர், புதுச்சேரியில் விரைவு நீதிமன்றம் அமைத்தல்.

விமான நிலைய விரிவாக்கம். புதுச்சேரியின் நீர் தேவைக்காக இந்திராவதி-கிருஷணா-பெண்ணை-காவிரி நதிகளை இணைப்பு மற்றும் கோதாவரி-வராகநதி-தென்பெண்ணை நதிகள் இணைப்பு. தமிழ்நாடு வழியாக காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு மணல் கொண்டு வருதல் உள்ளிட்ட விவகாரங்களை விவாதித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.