நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நீலகிரி மாவட்டத்தில் கனமழை: மலை ரயில் சேவை 2-ம் நாளாக ரத்து

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை 2-ஆம் நாளாக இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :6 செப்டம்பர் 2022, 3:06 am

DIN

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை 2-ஆம் நாளாக இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. 

கனமழை காரணமாக கல்லார்-ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே மண்சரிவு ஏற்பட்டது. மண்சரிவை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

ரெயில் பாதையை சீரமைக்கும் பணி நேற்று மாலை வரை நீடித்தது.    சீரமைக்கும் பணி இன்னும் முடிவடையாததால்  மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை இன்றும் (செவ்வாய்க்கிழமை) ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.