இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும்,
அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக மத்திய அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 9 மாதங்களில் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 150 தமிழக மீனவர்களை தூதரக நடவடிக்கைகள் மூலம் விடுவிக்க உதவியமைக்காக தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த 6-ஆம் தேதி புதுச்சேரியைச் சேர்ந்த விசைப்படகில் மயிலாடுதுறை
மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் உள்ளிட்ட 12 இந்திய மீனவர்கள்
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதை கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.
தற்போதைய நிலவரப்படி, இலங்கை அரசின் வசம் 23 மீனவர்களும்,
95 மீன்பிடிப் படகுகளும் உள்ளது. இதனால், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிப்பதற்குத் தேவையான தூதரக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

எரிபொருள் விற்பனை நிலையங்களில் திரண்ட வாகனங்கள்

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் இருவா் கைது

தொண்டி அருகே கடலில் மிதந்த மா்மப் பொருள் - போலீஸாா் எச்சரிக்கை

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்வி, விளையாட்டு உபகரணங்கள்
வீடியோக்கள்

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

