காஞ்சிபுரம்: மின்வாரியத்தின் அலட்சியம் காரணமாக, காஞ்சிபுரம் அருகே சாலை விரிவாக்க பணியின் போது மின்கம்பத்தை அகற்றாமல் சாலை அமைத்துள்ளனர்.
இதையும் பார்க்க : ராஜிவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை - புகைப்படங்கள்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வந்தவாசி சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை இணைக்கும் புறவழி சாலையாக திருபருத்திகுன்றம் சாலை அமைந்துள்ளது.
ஒரு வழி சாலையாக இருந்த இந்த சாலையை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சாலை விரிவாக்கம் மூலம் 3.5 கீ.மீ. நீளம் கொண்ட மின்கம்பங்களை அகற்றாமல் சாலைப் பணி செய்யப்பட்டது.
அப்போது, சாலையில் இருந்த மின்கம்பங்களை மாற்ற நெடுஞ்சாலைத்துறை மின்வாரிய அலுவலகத்திற்கு முறைப்படி தெரிவித்தது. மேலும் பொதுமக்களுக்கு போக்குவரத்து இடைஞ்சல் இல்லாமல் இருக்க உடனடியாக பணி மேற்கொள்ளப்பட்டது.
தற்போது பணி நிறைவு பெற்று ஓர் மாத காலத்திற்குப் பிறகும் கூட சாலையின் நடுவே மின் கம்பம் அகற்றப்படாமல் சாலையில் உள்ளதால் இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இன்மை காரணமாக வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மின்வாரிய ஊழியர்கள் இப்பணியை மேற்கொள்ள அவசரம் காட்டாமல் அலட்சியமாக கடந்த நான்கு மாதங்களாக செயல்பட்டு வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனை மின்வாரிய அலுவலகம் விரைவாக பணி மேற்கொள்ளப்பட்டு விபத்தில்லா பயன்பாட்டிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதையும் படிக்க: குட்டி யானைக்கு குடை பிடித்த வனத்துறை: வைரலாகும் விடியோ
கடந்த ஒரு மாத காலமாகவே தமிழகத்தின் வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் குடிநீர் பம்புகள் உள்ளிட்டவை நீக்கப்படாமல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இவ்வகை போல் சாலை பணிக்காக மின்கம்பம் அகற்றப்படாமல் போடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கைரேகை, கருவிழி ஒற்றுமையுடன் தேனி இரட்டையர்கள்! ஆதார் புதுப்பிக்க என்னதான் வழி?

ஜேடன் லெனாக்ஸ் 5 விக்கெட்டுகள்: தொடரை சமன்படுத்தியது நியூசிலாந்து!

துயருற்ற தாயின் குரல்! பிரதமர் மோடிக்கு கேத்தனின் தாய் கடிதம்!

அமலாக்கத் துறைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றார் ஐசரி கணேஷ்!
விடியோக்கள்

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy

மணமாலை வரம் தரும் முருகன் | Kalyana Kandha swamy Kovil | Madipakkam | கல்யாண கந்தசுவாமி கோயில்| கோயில் வலம் -3

தவெகவில் இணைய என்னை யாரும் அழைக்கவில்லை! - எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம் | TVK | ADMK



