மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கூத்தாநல்லூர்: இஸ்லாமியர்கள் பங்கேற்ற மஹா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் இஸ்லாமியர்கள் பங்கேற்ற மத நல்லிணக்கத்துடன் மஹா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

News image
Updated On :9 செப்டம்பர் 2022, 10:31 am

DIN

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் இஸ்லாமியர்கள் பங்கேற்ற மத நல்லிணக்கத்துடன் மஹா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

சின்ன கூத்தாநல்லூர், சிவன் கோயில் தெருவில் எழுந்தருளியுள்ள சாலக்கரையாள் என்ற ஸ்ரீ மஹா காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, கோயில் அருகே யாகசாலை அமைக்கப்பட்டது. யாகசாலை மண்டபத்தில், கொளப்பாடு ஆர்.ஜெகன் சிவாச்சாரியார் தலைமையில், அகிலாண்டேஸ்வரி சமேத சுந்தரேஸ்வரர் கோயில் வி.ராஜசேகர சிவாச்சாரியார் மற்றும் கோயில் அர்ச்சகர் சாம்பு சேகர் பூசாரி உள்ளிட்டோர் விக்னேஸ்வர பூஜையுடன் யாக பூஜைகள் தொடங்கப்பட்டது. 

Story image

தொடர்ந்து,யாக பூஜையில் வெள்ளிக்கிழமை காலை பூர்ணாஹூதி செய்யப்பட்டு யாக சாலை மண்டபத்திலிருந்து புனித நீர் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டது. காலை, 10.10 மணிக்கு, விமானக் கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. கும்பாபிஷேகத்தில், நகர மன்றத் தலைவர் மு.பாத்திமா பஷீரா, தமிழ் மாநில கட்டடத் தொழிலாளர்கள் மத்திய சங்க மாநில துணைத் தலைவர் ஆர்.சேகர், நகர மன்ற உறுப்பினர் பிரவீனா முத்துக்கிருஷ்ணன், காங்கிரஸ்  நகரத் தலைவர் சாம்பசிவம் மற்றும் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். 

Story image

கும்பாபிஷேக ஏற்பாடுகளை, நகர்மன்ற உறுப்பினர் மாரியப்பன், சின்னக் கூத்தாநல்லூர் சிவன் கோயில் தெரு கிராம வாசிகள் மற்றும் பக்தர்கள் கவனித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.