தாய் மொழியில் கல்வி கற்பது சிறந்தது: ஆளுநர் ஆர்.என்.ரவி 

செங்கல்பட்டு ஸ்ரீ கோகுலம் பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற 2020 தேசிய கல்விக் கொள்கை கருத்தரங்கு விழாவில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி தாய் மொழியில் கல்வி கற்பது சிறந்தது என்றார்.
தாய் மொழியில் கல்வி கற்பது சிறந்தது: ஆளுநர் ஆர்.என்.ரவி 

செங்கல்பட்டு: செங்கல்பட்டு ஸ்ரீ கோகுலம் பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற 2020 தேசிய கல்விக் கொள்கை கருத்தரங்கு விழாவில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி தாய் மொழியில் கல்வி கற்பது சிறந்தது என்றார்.

செங்கல்பட்டு மாவட்டம் நென்மேலி பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ கோகுலம் பள்ளியில்  ஸ்ரீ கோகுலம் சபரி ஹாலில் சனிக்கிழமை தமிழ்நாடு வித்யா பாரதி அமைப்பு சார்பில் ,  தேசிய கல்விக் கொள்கை - 2020 செயல்படுத்துதல் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. 

இந்தக் கருத்தரங்கில் 48 தனியார் பள்ளிகளை சேர்ந்த தாளாளர்கள், முதல்வர்கள், ஆசிரியர்கள் சுமார் 1300-க்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டனர். பல்வேறு தலைப்புகளை கொண்டு நடைபெற்ற தேசிய கல்விக் கொள்கை குறித்த கருத்தரங்கிற்கு தமிழ்நாடு வித்யா பாரதியின் தலைவர் டாக்டர் கிருஷ்ண செட்டி தலைமை தாங்கி வரவேற்றார் .

ஸ்ரீ கோகுலம் பொதுப்பள்ளியின் தாளாளர் லிஜிஷா பிரவின் ஆளுநருக்கு நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தார். சிறப்பு அழைப்பாளராக சமூக அறிவியல் ஆராய்ச்சியின் இந்திய ஆலோசனை உறுப்பினர் டாக்டர் பி. கனகசபாபதி சிறப்புரையாற்றினார். இதனைத் தொடர்ந்து புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்த புத்தகத்தை ஆளுநர் வெளியிட டாக்டர் கனகசபாபதி பெற்றுக்கொண்டார்.

தலைமை விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.  தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி ஆசிரியர்கள் மத்தியில் பேசுகையில், இதுவரை இந்திய நாட்டில் 60 மற்றும் 80-களில் இரண்டு முறை கல்விக் கொள்கைகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இப்பொழுது மூன்றாவது முறையாக கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால்  தேசிய அளவில் தற்போது கொண்டு வரப்பட உள்ள கல்விக் கொள்கையானது முதல் கல்விக் கொள்கை என்றே சொல்லலாம். 

தேசிய அளவில் தற்போது ஏன் கல்விக் கொள்கை புதிதாக தேவை என்றால், சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் ஆகிறது. உலக மக்கள் தொகையில் தற்போது இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.  இந்தியா விரைவில் முதல் இடத்திற்கும் வரலாம். வறுமை குறித்த சற்று பின் தங்கியுள்ளோம் என தெரிவித்தார்.  இந்தியா பொருளாதார ரீதியில் வேகமாக வளரும் நாடாக இருந்து வருகிறது.

இந்தியா சுதந்திரம் கிடைத்து விட்ட பொழுது மகாத்மா காந்தியிடம்,  ஏன் இந்தியா சுதந்திரம் அடைந்ததை கொண்டாடவில்லை. இப்பொழுது தான் நம் சுதந்திரமாக இருக்கிறோமே என கேட்ட பொழுது. பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்தவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறியே விட்டனர். 

ஆனால் அவர்கள் நம்முடைய  மூளையில் இன்னும் தங்கியுள்ளனர். நம் மூளையிலிருந்து அவர்கள் வெளியே செல்ல வேண்டுமென்றால், அவர்கள் நம்மை ஆட்சி செய்த ஆண்டுகளில் பாதியாவது தேவைப்படும் எனக் கூறினார். எனவே நாட்டை கட்டமைக்க வேண்டியது இன்றியமையதாக உள்ளது.  பிரிட்டிஷ் அரசு நம்மை ஆட்சி செய்த பொழுது, நம்முடைய கல்வி முறையை அழித்து விட்டார்கள் எனக் கூறினார்.

தற்பொழுது இந்தியாவில் தாய் மொழி வழி கல்வி இல்லை. நாம் அனைத்தையும் ஆங்கிலத்தில் கற்றுக் கொண்டு வருகிறோம். பிறமொழி கற்றுக் கொள்வது நல்லது தான். ஆங்கிலத்தில் படிப்பது தான் பெரியது என்று கிடையாது. பிரான்ஸ், சைனா, ரஷ்யா ,ஜெர்மனி போன்ற நாடுகளில் அவரவர் மொழிகளிலே படித்து வருகின்றனர். அறிவியல் பாடத்தை கூட அவர்கள் மொழியிலே கற்றுக் கொள்கின்றனர். அவரவர் தாய்மொழியில் படிப்பது நல்லது என பேசினார். ஏன் அது இந்தியாவில் முடியாது,  இந்தியாவின் அறிவு களஞ்சியத்தை மீட்டெடுக்க வேண்டும் என பேசினார்.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ கோகுலம் பொதுப்பள்ளியின் முதல்வர் கு.சங்கரநாராயணன் செங்கல்பட்டு விவேகானந்தா பள்ளியின் செயலாளர் சந்திரசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர். முடிவில் தமிழ்நாடு வித்யா பாரதியின் செயலாளர் எல்.ராமமூர்த்தி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com