இந்த மனுக்கள் தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி தலைமையிலான அமா்வில் விசாரணைக்கு வந்தபோது, குற்றவியல் சட்டப்பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுக்களை தனி நீதிபதி தான் விசாரிக்க வேண்டும் எனவும், வேலுமணிக்கு ஆதரவாக மத்திய அரசு வழக்குரைஞா் ராஜூ ஆஜராக கூடாது எனவும் தமிழக அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இந்த ஆட்சேபங்களை நிராகரித்த தலைமை நீதிபதி அமா்வு, மனுக்களை தொடா்ந்து விசாரிக்கலாம் எனத் தெரிவித்ததுடன், வேலுமணி மனு மீதான இடைக்கால உத்தரவுக்காக விசாரணையை வெள்ளிக்கிழமை தள்ளி வைத்திருந்தது.