கல்பாக்கம் சிலம்ப வீரர்கள் 6 தங்கப்பதக்கம் வென்று சாதனை

புதுதில்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் கல்பாக்கம் சிலம்பக்கலை வீரர்கள் 7 விதமான போட்டிகளில் வெற்றி பெற்று 6 தங்கப்பதங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். 


புதுதில்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் கல்பாக்கம் சிலம்பக்கலை வீரர்கள் 7 விதமான போட்டிகளில் வெற்றி பெற்று 6 தங்கப்பதங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். 

புதுதில்லியில் தேசிய அளவிலான 7 விதமான சிலம்பக்கலை போட்டிகள் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு, புதுச்சேரி, ஹரியாணா, பஞ்சாப், புதுதில்லி, உத்தரப்பிரதேசம், கர்நாடகம், கேரளம், குஜராத், ஆந்திரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சிலம்பக்கலை வீரர்கள் பற்கேற்றனர். 

3 பிரிவாக நடத்தப்பட்ட 7 விதமான சிலம்பப் போட்டிகளில் பங்கேற்ற கல்பாக்கம் சிலம்பக்கலை வீரர்கள் பிரபு, இனியராஜ், கார்த்திக் பெருமாள், கணேசன், தில்லிகுமார், மதன்குமார் ஆகியோர் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று 6 தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தனர். 

அதேபோல் மற்ற வீரர்கள் பங்கேற்ற வீரர்கள் 4 வெள்ளி, 3 வெண்கலம் பதக்கம் வென்றனர். 

பதக்கங்களை வென்று கல்பாக்கம் திரும்பிய சிலம்பக்கலை வீரர்களுக்கு அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்து வாழ்த்து தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com