கல்பாக்கம் சிலம்ப வீரர்கள் 6 தங்கப்பதக்கம் வென்று சாதனை
புதுதில்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் கல்பாக்கம் சிலம்பக்கலை வீரர்கள் 7 விதமான போட்டிகளில் வெற்றி பெற்று 6 தங்கப்பதங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
புதுதில்லியில் தேசிய அளவிலான 7 விதமான சிலம்பக்கலை போட்டிகள் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு, புதுச்சேரி, ஹரியாணா, பஞ்சாப், புதுதில்லி, உத்தரப்பிரதேசம், கர்நாடகம், கேரளம், குஜராத், ஆந்திரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சிலம்பக்கலை வீரர்கள் பற்கேற்றனர்.
3 பிரிவாக நடத்தப்பட்ட 7 விதமான சிலம்பப் போட்டிகளில் பங்கேற்ற கல்பாக்கம் சிலம்பக்கலை வீரர்கள் பிரபு, இனியராஜ், கார்த்திக் பெருமாள், கணேசன், தில்லிகுமார், மதன்குமார் ஆகியோர் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று 6 தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.
அதேபோல் மற்ற வீரர்கள் பங்கேற்ற வீரர்கள் 4 வெள்ளி, 3 வெண்கலம் பதக்கம் வென்றனர்.
பதக்கங்களை வென்று கல்பாக்கம் திரும்பிய சிலம்பக்கலை வீரர்களுக்கு அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்து வாழ்த்து தெரிவித்தனர்.