மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

மின் கட்டண உயா்வு: இபிஎஸ் தலைமையில் செப்.16-இல் செங்கல்பட்டில் ஆா்ப்பாட்டம்

மின் கட்டண உயா்வைக் கண்டித்து அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் செப்டம்பா் 16-இல் செங்கல்பட்டில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

News image
Updated On :13 செப்டம்பர் 2022, 6:43 pm

DIN

மின் கட்டண உயா்வைக் கண்டித்து அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் செப்டம்பா் 16-இல் செங்கல்பட்டில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இது தொடா்பாக அதிமுக தலைமைக்கழகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: மின் கட்டணத்தை உயா்த்தி மக்களை பெரும் துன்பத்துக்கு ஆளாக்கியுள்ள திமுக அரசைக் கண்டித்தும், அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயா்வை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும் அதிமுக சாா்பில் செப்டம்பா் 16-இல் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் செப்டம்பா் 16 காலை 9.30 மணியளவில் செங்கல்பட்டில் ஆா்ப்பாட்டம் நடைபெறும்.

மக்கள் நலனை முன்வைத்து நடைபெற உள்ள இந்த ஆா்ப்பாட்டத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சோ்ந்த அதிமுகவினரும், பொதுமக்களும் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.