காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

சொத்துப் பிரச்னை: தம்பியை கொடூரமாக வெட்டிக் கொன்ற சகோதரர்கள்!

சொத்து பிரச்னை காரணமாக தம்பியை கத்தியால் வெட்டிக் கொன்ற அண்ணன் மற்றும் தம்பியை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

கொலையுண்ட விருமாண்டி.

Published On :1 பிப்ரவரி 2024, 3:48 pm IST

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சொத்து பிரச்னை காரணமாக தம்பியை கத்தியால் வெட்டிக் கொன்ற அண்ணன் மற்றும் தம்பியை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

திருமங்கலம் அருகே செக்காணுரணி பாண்டியன் லைன் பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி மகன் விருமாண்டி(30). இவருடைய மனைவி விஜயா. விருமாண்டி திருப்பூரில் வேலை பார்த்து வந்துள்ளார். வாரம் ஒரு முறை வீட்டிற்கு வருவார். இவருடைய அண்ணன் கார்த்திக் ராஜா தம்பிகள்,  ஐகோர்ட் ராஜா மற்றும் காசி ராஜா ஆகியோர் உள்ளனர். 

இந்நிலையில் விருமாண்டிக்கும் கார்த்திக் ராஜா, ஐகோர்ட்ராஜா சொத்து பிரச்னை  சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 10:30 மணியளவில் குடும்பப் பிரச்னை பற்றி பேசுவதற்காக விருமாண்டி மற்றும் விஜயாவை கார்த்திக் ராஜா ஐகோர்ட்ராஜா அழைத்துள்ளனர்.

இதனால் அவர்களது சொந்த ஊரான கரிசல்பட்டியில் உள்ள வீட்டு முன்பு சென்ற போது அங்கிருந்த விருமாண்டி அம்மா தங்கமாளை பார்த்து எல்லாத்திற்கும் காரணம் நீதானே என விருமாண்டி திட்டி உள்ளார். 

இதனால் கார்த்திக் ராஜா மற்றும் ஐகோர்ட் ராஜா நண்பர் காளப்பன்பட்டியைச் சேர்ந்த சரத்குமார் மூன்று பேரும் சேர்ந்து சரமாரியாக விருமாண்டியை கத்தியால் வெட்டி உள்ளனர். மேலும் அம்மா தங்கம்மாள் தடுத்துள்ளார். 

இந்நிலையில் கடைசி தம்பி காசிராஜா அருகில் இருப்பவர்கள் அங்கு வரவே மூன்று பேரும் தப்பி ஓடி விட்டனர். இச்சம்பவம் தொடர்பாக செக்காணுரணி காவல் துறையினருக்கு  தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் செக்காணுரணி காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

விருமாண்டி மனைவி விஜயா செக்காணுரணி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கார்த்திக் ராஜா, ஐகோர்ட்ராஜா, சரத்குமார் மூன்று பேரையும் காவல் துறையினர்  கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.