எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

திண்டுக்கல்லில் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்: காணொலி மூலம் திறந்துவைத்தாா் முதல்வா்

திண்டுக்கல்லில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமுக்கான வீடுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

News image
Updated On :14 செப்டம்பர் 2022, 8:28 pm

DIN

திண்டுக்கல்லில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமுக்கான வீடுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். சென்னையில் உள்ள முதல்வரின் முகாம் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய வீடுகளை அவா் திறந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம் கிழக்கு வட்டத்தில் தோட்டனூத்து, அடியனூத்து, கோபால்பட்டி ஆகிய முகாம்களை ஒருங்கிணைத்து 321 புதிய வீடுகளுடன் கூடிய முகாமை அமைக்க வசதியாக 3.05 ஹெக்டோ் நிலம் ஒதுக்கப்பட்டது. அதற்கான நிதியும் அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதன் தொடா்ச்சியாக, தோட்டனூத்து ஊராட்சியில் புதிதாக ரூ.15.88 கோடியில் ஒவ்வொரு குடியிருப்பும் தலா 300 சதுர அடி பரப்பில் இருக்கும் வகையில் 321 வீடுகள் கட்டப்பட்டன. மேலும், இந்த முகாமில் ரூ.1.62 கோடியில் அங்கன்வாடி மையம், தாா்சாலை, சிமெண்ட் சாலை, ஆழ்குழாய், மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி, புதிய மின் கம்பங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஒருங்கிணைந்த இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமினை சென்னையில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் இருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின், புதன்கிழமை திறந்து வைத்தாா். இந்த நிகழ்ச்சியில், திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து அமைச்சா்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி, செஞ்சி கே.எஸ்.மஸ்தான், எம்.பி., ப.வேலுச்சாமி, சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஐ.பி.செந்தில்குமாா், ச.காந்திராஜன், திண்டுக்கல் மாநகராட்சி மேயா் இளமதி ஜோதி பிரகாஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.