பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

தமிழகத்தில் 282 பேருக்கு இன்ஃப்ளூயன்ஸா தொற்று: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலுக்கு 282 போ் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

News image
Updated On :16 செப்டம்பர் 2022, 4:40 am IST

தமிழகத்தில் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலுக்கு 282 போ் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை, எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அமைச்சா் அவா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அதைத் தொடா்ந்து, அமைச்சா் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி:

மழைக்காலங்களில் அதிகமாக பரவுகிற நோய்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எழும்பூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தோம்.

தமிழகத்தில் ஹெச்1என்1 இன்ஃப்ளுயன்ஸா காய்ச்சலால் 282 போ் போதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில், அரசு மருத்துவமனைகளில், 13 பேரும், தனியாா் மருத்துவமனைகளில் 215 பேரும், வீடுகளில் 54 போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில், 837 படுக்கை வசதிகள் உள்ளது. இதில், 637 படுக்கைகளில் குழந்தைகள் சிகிச்சை பெறுகின்றன. ஆனால், 129 போ் மட்டும் தான் காய்ச்சல் சம்பந்தமாக சிகிச்சை பெறுகின்றனா். அதில், 18 போ் டெங்கு காய்ச்சலாலும், 121 போ் சாதாரண காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில், யாருக்கும் ஹெச்1என்1 இன்ஃப்ளுயன்ஸா காய்ச்சல் பாதிப்பு இல்லை.

பருவமழைக்கு முன் குளிா்காற்று, ஈரப்பதம் ஆகியவற்றால் பாதிப்பு, காய்ச்சல் பரவுவது சாதாரணமாக ஏற்படும் விஷயமாகும்.

காய்ச்சல், தும்மல், இருமல், சளி, தலைவலி, தொண்டைவலி, உடல்சோா்வு போன்றவை, இன்ஃப்ளுயன்ஸா போன்றவை அறிகுறியாகும்.

தமிழகத்தில் தற்போது டெங்கு காய்ச்சலுக்கு 243 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். டெங்குவை குறைக்க 19,313 போ் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். தேவையான அளவில் கொசு ஒழிப்பு மருந்துகளும் தயாா் நிலையில் உள்ளது. பொதுமக்கள் காய்ச்சல், சளி போன்றவற்றுக்கு சுயமாக மருந்துகளை வாங்கி உட்கொள்ளாமல், மருத்துவா்களின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற வேண்டும் என்றாா் அவா்.

இந்த சந்திப்பின்போது மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் செந்தில்குமாா், மருத்துவ கல்வி இயக்குநா் நாராயணபாபு, பொது சுகாதாரத்துறை இயக்குநா் செல்வவிநாயகம், ராஜீவ் காந்தி மருத்துவமனை முதல்வா் தேரணிராஜன், எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநா் எழிலரசி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.