சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

அண்ணா பிறந்தநாள்: நீடாமங்கலத்தில் திமுக, அதிமுகவினர் மாலையணிவித்து மரியாதை

நீடாமங்கலத்தில் பேரறிஞர் அண்ணாவின் 114 ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

News image

நீடாமங்கலத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. பி.ராசமாணிக்கம் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்திய திமுகவினர்.

Updated On :1 பிப்ரவரி 2024, 3:49 pm IST

நீடாமங்கலம்: நீடாமங்கலத்தில் பேரறிஞர் அண்ணாவின் 114 ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு திமுக சட்டத்திட்ட திருத்தக் குழு உறுப்பினர் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் பி.ராசமாணிக்கம்  தலைமை வகித்தார்.

ஒன்றிய பெருந்தலைவர் சோம.செந்தமிழ்ச்செல்வன், வடக்கு ஒன்றிய செயலாளர் கே.வி.கே.ஆனந்து, பேரூர் செயலாளர் ரா.ராஜசேகரன், பேரூராட்சி தலைவர் ஆர்.ராம்ராஜ், ஒன்றிய முன்னாள் செயலாளர் விசு.அண்ணாதுரை, வடக்கு ஒன்றிய முன்னாள் பொறுப்பாளர் சி.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பெரியார்  சிலையிலிருந்து பேரணியாக புறப்பட்டு பேரறிஞர் அண்ணாவின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து திமுகவினர் மரியாதை செலுத்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் அனைத்து சார்பு அணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

அதிமுக: நீடாமங்கலத்தில் அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. கட்சியின் நகர செயலாளர் இ.ஷாஜஹான் தலைமை வகித்தார்.

ஒன்றியசெயலாளர்கள் மணலூர் ராஜேந்திரன், ஆதிஜனகர்,பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் செந்தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் சார்பு அணியினர் கலந்து கொண்டனர். அண்ணாசிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

வலங்கைமான்: வலங்கைமானில் திமுகவினர் மேற்கு ஒன்றிய செயலாளர் வீ.அன்பரசன் தலைமையிலும்,கிழக்கு ஒன்றியசெயலாளர் தெட்சிணாமூர்த்தி, நகரசெயலாளர் சிவநேசன், பேரூராட்சி துணைத்தலைவர் தனித்தமிழ்மாறன் முன்னிலையிலும் பள்ளிவாசலிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு அண்ணா சிலைக்கு மாலையணிவித்தனர்.

இதேபோல் அதிமுகவினர் நகரசெயலாளர் சா.குணசேகரன் தலைமையிலும் ஒன்றியசெயலாளர்கள் சங்கர், இளவரசன் ஆகியோர் முன்னிலையிலும் அண்ணா சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.