நீடாமங்கலம்: நீடாமங்கலத்தில் பேரறிஞர் அண்ணாவின் 114 ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு திமுக சட்டத்திட்ட திருத்தக் குழு உறுப்பினர் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் பி.ராசமாணிக்கம் தலைமை வகித்தார்.
ஒன்றிய பெருந்தலைவர் சோம.செந்தமிழ்ச்செல்வன், வடக்கு ஒன்றிய செயலாளர் கே.வி.கே.ஆனந்து, பேரூர் செயலாளர் ரா.ராஜசேகரன், பேரூராட்சி தலைவர் ஆர்.ராம்ராஜ், ஒன்றிய முன்னாள் செயலாளர் விசு.அண்ணாதுரை, வடக்கு ஒன்றிய முன்னாள் பொறுப்பாளர் சி.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பெரியார் சிலையிலிருந்து பேரணியாக புறப்பட்டு பேரறிஞர் அண்ணாவின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து திமுகவினர் மரியாதை செலுத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் அனைத்து சார்பு அணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
அதிமுக: நீடாமங்கலத்தில் அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. கட்சியின் நகர செயலாளர் இ.ஷாஜஹான் தலைமை வகித்தார்.
ஒன்றியசெயலாளர்கள் மணலூர் ராஜேந்திரன், ஆதிஜனகர்,பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் செந்தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் சார்பு அணியினர் கலந்து கொண்டனர். அண்ணாசிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதையும் படிக்க | ‘நேரம் வரும்போது அதிமுக அலுவலகம் செல்வேன்’: சசிகலா
வலங்கைமான்: வலங்கைமானில் திமுகவினர் மேற்கு ஒன்றிய செயலாளர் வீ.அன்பரசன் தலைமையிலும்,கிழக்கு ஒன்றியசெயலாளர் தெட்சிணாமூர்த்தி, நகரசெயலாளர் சிவநேசன், பேரூராட்சி துணைத்தலைவர் தனித்தமிழ்மாறன் முன்னிலையிலும் பள்ளிவாசலிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு அண்ணா சிலைக்கு மாலையணிவித்தனர்.
இதேபோல் அதிமுகவினர் நகரசெயலாளர் சா.குணசேகரன் தலைமையிலும் ஒன்றியசெயலாளர்கள் சங்கர், இளவரசன் ஆகியோர் முன்னிலையிலும் அண்ணா சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.