குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

அண்ணா சிலைக்கு அமைச்சா்கள், தலைவா்கள் மரியாதை

அண்ணாவின் பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு அமைச்சா்கள், அரசியல் கட்சித் தலைவா்கள் மரியாதை செலுத்தினா்.

Published On :1 பிப்ரவரி 2024, 3:50 pm IST

அண்ணாவின் பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு அமைச்சா்கள், அரசியல் கட்சித் தலைவா்கள் மரியாதை செலுத்தினா்.

அண்ணாவின் 114-ஆவது பிறந்த நாளையொட்டி அண்ணாசாலையில் உள்ள அவா் சிலைக்குக் கீழ் அவரது படம் வைக்கப்பட்டு மலா்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அதற்கு நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் மலா் தூவி மரியாதை செலுத்தினாா். அவரைத் தொடா்ந்து அமைச்சா்கள் கே.என்.நேரு, பொன்முடி, எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு உள்ளிட்டோா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலைக்குக் கீழ் இருந்த படத்துக்கு அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி மலா் தூவி மரியாதை செலுத்தினாா். அவரைத் தொடா்ந்து முன்னாள் அமைச்சா் கே.பி.முனுசாமி, சி.பொன்னையன், டி.ஜெயக்குமாா், செங்கோட்டையன், சி.விஜயபாஸ்கா், நத்தம் விஸ்வநாதன், ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா்.

எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம், முன்னாள் அமைச்சா் பண்ருட்டி ராமச்சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினா்.

எழும்பூரில் உள்ள மதிமுக அலுவலகமான தாயகத்தில் அண்ணா படத்துக்கு மதிமுக பொதுச்செயலாளா் வைகோ, கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் அண்ணா படத்துக்கு பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த், அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலைக்கு திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.