மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!யுஜிசி - நெட் தேர்வுக்கான விடைக்குறிப்பு விரைவில் வெளியீடு!கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

விருதுநகர் ஆட்சியா் அலுவலக கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்

விருதுநகர் ரூ.70.57 கோடியில்  மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்திற்கான புதிய கட்டத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை அடிக்கல் நாட்டினார்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 3:49 pm IST

விருதுநகர் ரூ.70.57 கோடியில்  மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்திற்கான புதிய கட்டத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை அடிக்கல் நாட்டினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடம் கடந்த 1986ல் திறக்கப்பட்டது. இந்த அலுவலகத்தில் இடப் பற்றாக்குறை உள்ளது. இதனால், நவீன வசதிகளுடன் கூடிய மாவட்ட ஆட்சியர்  அலுவலக புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மூலம் புதிய ஆட்சியர் அலுவலகம் ரூ. 70.57 கோடி மதிப்பில் ஆறு தளங்களுடன் மொத்தம் 2, லட்சத்து 2, ஆயிரத்து 496 சதுரஅடி பரப்பளவில் கட்டப்படவுள்ளது. இந்த புதிய கட்டடத்திற்கான கட்டிடப் பணிகளை தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின்  இன்று காலை அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

பின்னர் இவ்வளாகத்தில் வேளாண்மை துறை, பள்ளிக் கல்வித் துறை, ஊரக வளர்ச்சித் துறை, சுகாதாரத்துறை, செய்தி மக்கள் தொடர்புத் துறை, ஊரக வாழ்வாதார இயக்கம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், மாவட்டத்தின் சிறப்பு திட்டங்கள் பொதுப்பணித்துறை சார்பாக அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளை முதல்வர் பார்வையிட்டார்.

அதை தொடர்ந்து சிவகாசி பகுதியை சேர்ந்த பாண்டி தேவி என்பவருக்கு அங்கன்வாடியில் பணி நியமன ஆணையை முதல்வர் வழங்கினார்.

அப்போது அமைச்சர்கள் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, அன்பில் மகேஸ் பொய்யா மொழி மற்றும் மாவட்ட ஆட்சியர் ஜெ. மேகநாதரெட்டி, சட்டப்பேரவை உறுப்பினர், மக்களவை உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

முன்னதாக விருதுநகர் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் தமிழக முதல்வரை, நரிக்குறவர் சமுதாய மக்கள் நேரில் சந்தித்தனர். அப்போது தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்ததற்காக நன்றி தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.