தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

தேவையற்ற நேரங்களில் மின் சாதனங்கள் இயக்குவதை தவிர்க்க விவசாயிகளுக்கு வேண்டுகோள்

தேவையற்ற நேரங்களில் மின் சாதனங்கள் இயக்குவதை தவிர்த்து, மின் இழப்பு ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

News image
Updated On :16 செப்டம்பர் 2022, 12:14 pm IST

அவிநாசி: தேவையற்ற நேரங்களில் மின் சாதனங்கள் இயக்குவதை தவிர்த்து, மின் இழப்பு ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

திருப்பூர், அவிநாசி விவசாயிகளுக்கான மின் சிக்கனம் மற்றும் மின்திறன், மின்பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுப் பயிற்சி முகாம் அவிநாசியில் வியாழக்கிழமை நடைபெற்றது. 
திருப்பூர் மின் பகிர்மான வட்டம், மத்திய திறனூக்கச் செயலகம் நடைபெற்ற முகாமிற்கு திருப்பூர் கூடுதல் தலைமை வகித்தார். செயற்பொறியாளர்கள் பி.பரஞ்சோதி, டி.சுமதி, ராஜகுமாரி, ராமச்சந்திரன், கலைச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி பொறியாளர் முரளிதரன் (மாவட்ட எரிசக்தி முகமை ஆட்சியர் அலுவலகம்), மேற்பார்வை பொறியாளர் (ஒய்வு) ஆர்.ராஜாமணி ஆகியோர் விளக்கவுரையற்றினர். 

இதில் விவசாயிகள் மின்சாரத்தை மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். தேவையற்ற நேரங்களில் மின் சாதனங்கள் இயக்குவதை தவிர்த்து, மின் இழப்பு ஏற்படுவதைத் தடுக்க வேண்டும். தமிழக அரசு வழங்கும் சூரிய மின்சக்தி திட்டம், மானியத்தில் மின் மோட்டார் வாங்கும் திட்டம், தட்கோ திட்டத்தில் மின் இணைப்பு பெறுதல் உள்ளிட்ட தமிழக அரசு வழங்கும் நலத்திட்டங்களை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

இலவச மின் இணைப்பு பெற்ற விவசாயிகள் மின்மோட்டாரை தேவையான அளவு மட்டும் பயன்படுத்த வேண்டும். தேவையின்றி மின்சாரத்தை பயன்படுத்தும் போது மின்வாரியத்திற்கு மின் இழப்பு ஏற்படுகின்றது. மேலும் அதிக விபத்துகள் ஏற்படுத்தும் சில்க் வயர்களை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இலவச மின்சாரம் அறிக்கையில் உள்ளபடி தொடரும் என்பது உள்ளிட்ட விளக்கங்கள் எடுத்துரைக்கப்பட்டது. 

இதையடுத்து பயிற்சி முகாமில் பங்கேற்ற விவசாயிகளுக்கு மரக்கன்றுகள், மின் விளக்குகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. காலை முதல் மாலை வரை நடைபெற்ற பயிற்சி முகாமில் திருப்பூர் அவிநாசி பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.