ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

தேவையற்ற நேரங்களில் மின் சாதனங்கள் இயக்குவதை தவிர்க்க விவசாயிகளுக்கு வேண்டுகோள்

தேவையற்ற நேரங்களில் மின் சாதனங்கள் இயக்குவதை தவிர்த்து, மின் இழப்பு ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

News image
Updated On :16 செப்டம்பர் 2022, 0:14 pm IST

அவிநாசி: தேவையற்ற நேரங்களில் மின் சாதனங்கள் இயக்குவதை தவிர்த்து, மின் இழப்பு ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

திருப்பூர், அவிநாசி விவசாயிகளுக்கான மின் சிக்கனம் மற்றும் மின்திறன், மின்பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுப் பயிற்சி முகாம் அவிநாசியில் வியாழக்கிழமை நடைபெற்றது. 
திருப்பூர் மின் பகிர்மான வட்டம், மத்திய திறனூக்கச் செயலகம் நடைபெற்ற முகாமிற்கு திருப்பூர் கூடுதல் தலைமை வகித்தார். செயற்பொறியாளர்கள் பி.பரஞ்சோதி, டி.சுமதி, ராஜகுமாரி, ராமச்சந்திரன், கலைச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி பொறியாளர் முரளிதரன் (மாவட்ட எரிசக்தி முகமை ஆட்சியர் அலுவலகம்), மேற்பார்வை பொறியாளர் (ஒய்வு) ஆர்.ராஜாமணி ஆகியோர் விளக்கவுரையற்றினர். 

இதில் விவசாயிகள் மின்சாரத்தை மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். தேவையற்ற நேரங்களில் மின் சாதனங்கள் இயக்குவதை தவிர்த்து, மின் இழப்பு ஏற்படுவதைத் தடுக்க வேண்டும். தமிழக அரசு வழங்கும் சூரிய மின்சக்தி திட்டம், மானியத்தில் மின் மோட்டார் வாங்கும் திட்டம், தட்கோ திட்டத்தில் மின் இணைப்பு பெறுதல் உள்ளிட்ட தமிழக அரசு வழங்கும் நலத்திட்டங்களை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

இலவச மின் இணைப்பு பெற்ற விவசாயிகள் மின்மோட்டாரை தேவையான அளவு மட்டும் பயன்படுத்த வேண்டும். தேவையின்றி மின்சாரத்தை பயன்படுத்தும் போது மின்வாரியத்திற்கு மின் இழப்பு ஏற்படுகின்றது. மேலும் அதிக விபத்துகள் ஏற்படுத்தும் சில்க் வயர்களை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இலவச மின்சாரம் அறிக்கையில் உள்ளபடி தொடரும் என்பது உள்ளிட்ட விளக்கங்கள் எடுத்துரைக்கப்பட்டது. 

இதையடுத்து பயிற்சி முகாமில் பங்கேற்ற விவசாயிகளுக்கு மரக்கன்றுகள், மின் விளக்குகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. காலை முதல் மாலை வரை நடைபெற்ற பயிற்சி முகாமில் திருப்பூர் அவிநாசி பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.