காலாண்டு விடுமுறைக்கு பிறகு 1 முதல் 5ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் காலாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் அக்டோபர் 6ஆம் தேதி தொடங்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது.
இதற்கிடையே தமிழகத்தில் காலாண்டு விடுமுறைக்கு பிறகு ‘எண்ணும் எழுத்தும் திட்டம்’ அமல்படுத்தப்படவுள்ளதால், ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் அக். 6, 7, 8 தேதிகளில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகக் காரணம் என்ன?
இந்த பயிற்சியில் தொடக்கக் கல்வி நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அனைத்து நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5 வகுப்பு வரை மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவன கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு அக். 10 க்கு மாற்றப்பட்டுள்ளது. பிற வகுப்பு மாணவர்கள் ஏற்கெனவே அறிவித்தது போல் அக். 6-ல் வகுப்புகள் தொடங்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு: இன்று கடைசி நாள்!

அண்ணா ஆட்சியில் அமர்ந்து தமிழினம் தலைநிமிர்ந்த நாள்! - முதல்வர் மு.க. ஸ்டாலின்

திருநள்ளாற்றில் சனிப்பெயர்ச்சி விழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்!

ரூ.20,000 கோடி மதிப்பிலான அரசு பத்திரங்கள் மாற்றம் : மாா்ச் 9-இல் ‘ஸ்விட்ச்’ ஏலம் - ரிசா்வ் வங்கி
வீடியோக்கள்

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

இரண்டாம் அரையிறுதிப் போர்: பழிதீர்க்குமா இங்கிலாந்து?
தினமணி வீடியோ செய்தி...

