சென்னை: என்சிஇஆர்டி சார்பில் நாட்டில் நடைபெற்ற கல்வித்திறன் ஆய்வில், எண்களை அறியும் அடிப்படைத் திறனில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு மாணவர்கள் பின்தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
அடிப்படை கற்கும் திறன் ஆய்வு - 2022 பெயரில் நடத்தப்பட்ட ஆய்வில், தமிழகத்தில் மூன்றாம் வகுப்பில் பயிலும் 29 சதவீத மாணவர்கள், அடிப்படை கணிதத் திறன்கள் கூட இல்லாமல், எண்களை அடையாளம் காணுதல், பெருக்குதல், வகுத்தல் மற்றும் காலண்டரில் தேதி, மாதம் உள்ளிட்டவற்றை அறிந்து கொள்வதுபோன்றவற்றில் பின்தங்கியிருப்பது தெரிய வந்துள்ளது.
இதையும் படிக்க | ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருப்பவர்கள் கவனிக்க..
கல்வித் திறனில் பின்தங்கியிருக்கும் மாணவர்களில், நாட்டின் சராசரி 11 சதவீதமாக இருக்கும் நிலையில், தமிழகம் 29 சதவீதமாக உள்ளது.
இதனைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் 28 சதவீதத்துடனும், அசாம் 18 சதவீதத்துடனும் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. மொத்த குழந்தைகள் எண்ணிக்கையில் பள்ளியில் சேர்க்கப்படும் பிள்ளைகளில் நாட்டின் சராசரி 27.1 சதவீதமாக இருக்கும் நிலையில், 51.4 சதவீதமாக இருக்கும் தமிழகத்துக்கு இது மிகப்பெரிய அவமானமாகக் கருதப்படுகிறது.
தமிழகத்தில் அடிப்படை அறிவுத் திறனில் 48 சதவீதமும், ஆங்கில அறிவில் 43 சதவீத மாணவர்களும் பின்தங்கியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வைகாசி மாதப் பலன்கள் - மீனம்

வைகாசி மாதப் பலன்கள் - கும்பம்

வைகாசி மாதப் பலன்கள் - மகரம்

வைகாசி மாதப் பலன்கள் - தனுசு
விடியோக்கள்

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

ADMKவின் சரிவு? செங்கோட்டையன் விமர்சனம்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

மதுரை மாநகராட்சியில் ரூ. 400 கோடிக்கும் மேல் ஊழல்! அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Ravindran Duraisamy Interview | அதிமுக இனி ..? | ADMK | EPS | C. V. Shanmugam | S. P. Velumani
தினமணி செய்திச் சேவை

