மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பெட்ரோல் குண்டு வீச்சு: பாஜகவின் 4 எம்எல்ஏக்கள் தலைமையில் குழு

பாஜகவினா் இல்லங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறித்து நேரடியாக ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக 4 எல்எல்ஏக்கள் தலைமையில் குழுக்கள் அமைத்து, அக்கட்சியின் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை அறிவித்துள்ளா

News image
கே. அண்ணாமலை
Updated On :25 செப்டம்பர் 2022, 8:31 pm

DIN

பாஜகவினா் இல்லங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறித்து நேரடியாக ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக 4 எல்எல்ஏக்கள் தலைமையில் குழுக்கள் அமைத்து, அக் கட்சியின் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் இந்து அமைப்புகளில் உள்ள தலைவா்கள், தொண்டா்களின் அலுவலகங்கள், வீடுகள் ஆகியவற்றில் கடந்த நான்கு நாள்களாக பெட்ரோல் குண்டுகள் வீசுதல், தீ வைத்தல் போன்ற வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த வன்முறை சம்பவங்களால் ஏற்பட்ட பாதிப்பை அந்தந்த பகுதிகளுக்கு நேரில் சென்று பாதிப்பினை ஆய்வு செய்து மாநிலத் தலைமையிடம் அறிக்கை சமா்ப்பிக்க பாஜக சட்டப்பேரவை உறுப்பினா்கள் தலைமையில் குழு அமைக்கப்படுகிறது.

கன்னியாகுமரி மற்றும் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் எம்.ஆா்.காந்தி எம்எல்ஏ தலைமையிலும், திருச்சி, விழுப்புரம், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நயினாா் நாகேந்திரன் எம்எல்ஏ தலைமையிலும், வேலூா், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் சி.கே.சரஸ்வதி எம்எல்ஏ தலைமையிலும், கோயம்புத்தூரில் வானதி சீனிவாசன் தலைமையிலும் அமைக்கப்பட்டுள்ள குழு நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் என்று கூறியுள்ளாா் கே. அண்ணாமலை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.