மானாமதுரை பகுதி கிராமங்களுக்கு நகரப் பேருந்துகள் சேவை தொடக்கம் 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் உள்ள கிராமங்களுக்கு அரசு நகரப் பேருந்துகள் சேவை தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நகரப் பேருந்துகள் சேவையை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அருகில் திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன்.
நகரப் பேருந்துகள் சேவையை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அருகில் திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன்.
Published on
Updated on
1 min read

மானாமதுரை:  சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் உள்ள கிராமங்களுக்கு அரசு நகரப் பேருந்துகள் சேவை தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மானாமதுரைலிருந்து அருகேயுள்ள மேலநெட்டூர், திருப்பாச்சேத்தி, குவளைவேலி ஆகிய கிராமங்களுக்கு நகரப் பேருந்துகள் சேவையை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி கொடியசைத்து தொடக்கி வைத்தார். 

மானாமதுரை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இவ்விழாவில் திருப்புவனம் பேரூராட்சித் தலைவரும், திமுக மாவட்ட துணை செயலாளருமான சேங்கைமாறன், ஊராட்சி ஒன்றியத் தலைவர் லதா, அண்ணாதுரை மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், போக்குவரத்துக் கழக அலுவலர்கள், திமுகவினர்  கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com