25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

அனைவரையும் உள்ளடக்கியது திமுக அரசு: மு.க.ஸ்டாலின்

தமிழகத்திலுள்ள அனைத்து மக்களையும் உள்ளடக்கிய அரசாக திமுக அரசு இருக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

மேடையில் உரையாற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published On :1 பிப்ரவரி 2024, 3:56 pm IST

தமிழகத்திலுள்ள அனைத்து மக்களையும் உள்ளடக்கிய அரசாக திமுக அரசு இருக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சென்னை அருகேவுள்ள வானகரத்தில் நடைபெற்ற தென்னிந்தியத் திருச்சபையின் பவள விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Story image

பின்னர் மேடையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், எதுவும் இல்லாதவர்களை இணைக்கும் வகையில் திருச்சபை உருவாக்கப்பட்டுள்ளது. இதனால்தான் 40 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டதாக இந்த திருச்சபையாக உருவாகியுள்ளது. 

இந்தியா என்பது பல்வேறு மதத்தினர் வாழ்கின்ற நாடு. மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும் அனைவரும் ஒற்றுமையோடு வாழ்கிறோம். மதங்கள் பெரும்பாலும் அன்பையே போதிக்கிறது. சமத்துவம், சகோதரத்துவம், ஒற்றுமை, பகிர்தல், தியாகம் ஆகியவற்றையே கிறிஸ்தவம் போதிக்கிறது. 

எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடலின் நோக்கம். தவித்த வாய்க்கு தண்ணீராக, திக்கற்றவர்களுக்கு திசையாக, யாரும் இல்லாதவர்களுக்கு ஆறுதலாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. திமுக அரசு என்பது அனைவரையும் உள்ளடக்கியதுதான் எனக் குறிப்பிட்டார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.