
கனமழை காரணமாக திருவாரூர் மற்றும் நன்னிலம் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை தொடர்வதால் பள்ளி மாணவர்களின் பாதுகாப்புக் கருதி, திருவாரூர் மற்றும் நன்னிலம் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் வடுவூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது.
இதையும் படிக்க.. ராஜ ராஜ சோழன் யார் தெரியுமா? ஆவேசப் பேச்சால் அசர வைத்த விக்ரம்
தொடர்ந்து பத்து நாள்களுக்கும் மேலாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், கடந்த சில நாள்களாகக் கனமழை கொட்டித் தீர்க்கிறது.
மன்னார்குடி, வடுவூர், எடமேலையூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை காரணமாக வயல்களில் மழைநீர் தேங்கியது. தாழ்வான பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.