எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கணவன்-மனைவி பிரச்னை: ஆட்சியர் அலுவலகம் முன்பு தாக்கிக்கொண்ட குடும்பத்தினர்

குடும்ப தகராறினை விசாரிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த தம்பதி - இரு குடும்பத்தினரும் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஒருவரை ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கிக் கொண்டதால் பரபரப்பு.

News image
Updated On :27 செப்டம்பர் 2022, 1:37 pm

DIN


ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்தகராறு காரணமாக எழுந்த புகாரில்  விசாரணைக்கு வந்த போது, கணவன் - மனைவி ஆகிய இரு  குடும்பத்தினரும் ஒருவருக்கொருவர் மாவட்ட ஆட்சியர் வளாகத்திலேயே கண்மூடித்தனமாக தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராணிப்பேட்டை  மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த ஒழுகூர் காலனி பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் கோகிலா. அதே பகுதியைச் சேர்ந்த உறவினரான கலைவாணன் என்பவரை கடந்த 2020ஆம் ஆண்டு இது வீட்டாரும் சேர்ந்து திருமணம் செய்து வைத்தனர்.

இந்நிலையில், கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து கோகிலா ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புகார் தெரிவித்து இருந்தார். இந்த புகார் குறித்து போலீசார் சரிவர விசாரிக்கவில்லை.

Story image

இதனால் விரத்தியடைந்த கோகிலாவின் குடும்பத்தினர், மாவட்ட சமூக நலத்துறையில் புகார் தெரிவித்திருந்தனர். இந்த புகார் குறித்து இருதரப்பினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், சமூக நலத்துறை சார்பில் கோகிலா அளித்த புகாரின் மீது மீண்டும் விசாரணைக்காக இருதரப்பினரையும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சமூக நலத்துறைக்கு வரவைத்தனர். அப்போது, அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய போது இரு குடும்பத்தினர் கிடையே தகராறு ஏற்பட்டது.

Story image

தொடர்ந்து, இருதரப்பினரும் சமூக நலத் துறை அலுவலகத்தில் இருந்து வெளியேறி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முன்பு ஒருவரை ஒருவர் சரமரியாக தாக்கிக் கொண்டனர். இதில், தரப்பினரை சேர்ந்தவர்களுக்கு ரத்த காயம் ஏற்பட்டது.

வாலாஜா அரசு மருத்துவமனைக்கு சென்றனர். மேலும், கோகிலாவின் குடும்பத்தினர் கலைவாணன் குடும்பத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வளாகத்தில்  அலுவலகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Story image

தகவலறிந்து, ராணிப்பேட்டை காவல் துறையினர் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி  துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும், காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ராணிப்பேட்டை துணைக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்  விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இரு தரப்பினர் தாக்கி கொண்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.