மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சென்னையில் 2 நாள்களுக்கு டாஸ்மாக் இயங்காது!

சென்னையில் காந்தி ஜெயந்தி மற்றும் மிலாடி நபியை முன்னிட்டு அக்டோபர் 2 மற்றும் 9 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதி தெரிவித்துள்ளார். 

News image

கோப்புப் படம்

Updated On :28 செப்டம்பர் 2022, 2:51 pm


சென்னையில் காந்தி ஜெயந்தி மற்றும் மிலாடி நபியை முன்னிட்டு அக்டோபர் 2 மற்றும் 9 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதி தெரிவித்துள்ளார். 

டாஸ்மாக் பார்கள், உரிமம் பெற்ற சிறப்பு பார்கள் கட்டாயமாக 2 நாள்கள் மூடப்பட வேண்டும் எனவும் ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார். 

நாடு முழுவதும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தியடிகளின் பிறந்தநாளையொட்டி காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. 

அக்டோபர் 2ஆம் தேதி அரசு விடுமுறையாகயாக உள்ள நிலையில், சென்னையில் அந்த நாளன்று டாஸ்மாக் கடைகள், பார்கள், உரிமம் பெற்றுள்ள  சிறப்பு பார்களும் மூடப்பட வேண்டும்.

அதேபோல், முகமது நபி (ஸல்) பிறந்த நாளான மிலாடி  நபியை முன்னிட்டு அக்டோபர் 9 ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என ஆட்சியர் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.