கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

'ஆட்சியர்கள் பணியிடை  நீக்கம்': உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

மனித கழிவை அள்ள மனிதர்களை பயன்படுத்தினால் ஆட்சியர்கள்  பணியிடை  நீக்கம் செய்யப்படுவர் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை எச்சரித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :29 செப்டம்பர் 2022, 12:55 pm IST

மனித கழிவை அள்ள மனிதர்களை பயன்படுத்தினால் ஆட்சியர்கள்  பணியிடை  நீக்கம் செய்யப்படுவர் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை எச்சரித்துள்ளது.

தூய்மை பணியாளர்களுக்கு எப்போது விடிவுகாலம் பிறக்கும் என்று தெரியவில்லை என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். உயர் நீதிமன்ற நீதிபதிகள் மகா தேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு வேதனை தெரிவித்துள்ளது.

மனித கழிவுகளை மனிதனே அள்ளுவதை ஒருபோதும் நீதிமன்றம் அனுமதிக்காது என்று  உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், மனித கழிவுகளை மனிதனே அகற்றுவதற்கு 2013-லேயெ தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடை இருந்தும் பல்வேறு மாவட்டங்களில் மனித கழிவுகளை மனிதர்களே எடுக்கும் அவலம் தொடர்கிறது.  மனித கழுவுகளை இயந்திரங்களை கொண்டு ரோபோட் முறையில் அள்ளுவதற்கு உத்தர வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


மனித கழிவுகளை மனிதன் அள்ள தடை விதித்த உத்தரவை செயல்படுத்திய ஆவணங்களை அரசு தரப்பில் தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.