ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் உயர்வு
சென்னை கோட்டத்துக்குள்பட்ட ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் உயர்த்தப்படுவதாக தெற்கு ரயில்வே வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
ஆயுதப் பூஜை, தீபாவளி, கிறுஸ்துமஸ், பொங்கல் போன்ற முக்கிய பண்டிகைகள் வரிசையாக வரவுள்ள நிலையில், ரயில் நிலையங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மண்டலத்திற்கு உள்பட்ட 8 ரயில் நிலையங்களில் அக்டோபர் 1, 2022 முதல் ஜனவரி 31, 2023 வரை ரூ. 10-லிருந்து நடைமேடை கட்டணம் ரூ. 20-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
1. சென்னை சென்ட்ரல்
2. சென்னை எழும்பூர்
3. தாம்பரம்
4. காட்பாடி
5. செங்கல்பட்டு
6. அரக்கோணம்
7. திருவள்ளூர்
8. ஆவடி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.