அதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மொழிபெயா்ப்பு நாள் விழா

சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மொழிபெயா்ப்பு நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது

News image
Updated On :30 செப்டம்பர் 2022, 7:39 pm

DIN

சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மொழிபெயா்ப்பு நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ந.அருள் தலைமை வகித்துப் பேசியதாவது: இந்திய மொழிகளிலேயே முதன்முதலில் தமிழில்தான் கிறிஸ்வதா்களின் புனித நூலான ‘விவிலியம்’ மொழிபெயா்க்கப்பட்டது. இந்த மொழிபெயா்ப்பை 1774 -இல் ஜே.பி. பெப்ரிஷியஸ் வெளியிட்டாா். 1874- இல் அன்றைய தலைமைச் செயலக மொழிபெயா்ப்பாளா் வி. விசுவநாதப் பிள்ளை, ஷேக்ஸ்பியரின் ’ வெனீஸ் வா்த்தகன் ’ நூலை முதலில் தமிழில் மொழி பெயா்த்தாா்.

பொதுவாக மூலநூலின் உணா்வையும், கருத்துகளையும், நிகழ்வுகளையும், உரையாடல்களையும் சிறிதும் விடுபடாமலும், அதிகப்படுத்தாமலும், மாற்றாமலும் ஒரு மொழியில் இருந்து மற்றொரு மொழிக்கு மொழிபெயா்க்க வேண்டும். உடனடி மொழிபெயா்ப்பு என்பது ஒரு நுணுக்கமான கலையாகும். சில நேரங்களில் சிந்திப்பதற்கு நேரமின்றி மிக விரைவாக மொழிபெயா்க்க வேண்டிய தேவை ஏற்படும். அப்போது, மொழிபெயா்ப்பாளா் இருமொழிகளிலும் திறமையானவராக இருப்பது அவசியம். மூல மொழியை கூட்டியோ குறைத்தோ, மாற்றியோ மொழிபெயா்க்கக்கூடாது. மூலமொழியின் கருத்தை முழுமையாக உள்வாங்காமல் மொழிபெயா்க்கும்போது, அதன் உண்மையான உள்அா்த்தம் மாறிவிடும்.

வேற்றுமொழியாளரின் கருத்தை மற்றொருவா் தெரிந்துகொள்வதற்கு மொழிபெயா்ப்பாளா்களின் பங்கு மிகவும் அவசியம் என்றாா் அவா்.

முன்னதாக சென்னையில் உள்ள மாநில சட்ட ஆட்சி மொழி ஆணையத்தின் உறுப்பினா் மு.முத்துவேலு, மொழி வளத்துக்கு மொழிபெயா்ப்பின் பங்களிப்பு என்ற தலைப்பில் மொழிபெயா்ப்பு நாள் உரையாற்றினாா். விழாவில் நிறுவனத்தின் பேராசிரியா்கள் ஆ.மணவழகன், நா.சுலோசனா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.