தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
அச்சுறுத்தல் காரணமாக அண்ணாமலைக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் தெரிவித்துள்ளது.
இதனால் 2 தனி பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட 11 பேர் கொண்ட துணை ராணுவப்படையினர் அண்ணாமலைக்கு பாதுகாப்பு வழங்குவர்.
தமிழக பாஜக தலைவராக இருந்த எல். முருகன் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றதையடுத்து, கடந்த ஆண்டு தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.