ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு(டெட்) விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை ஏப்ரல் 26ஆம் தேதி வரை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
காலக்கெடுவை நீட்டிக்க கோரிக்கைகள் வந்ததையடுத்து ஏப்.18 முதல் ஏப்.26 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சர்வர் பிரச்னையால் விண்ணப்பிக்க முடியாமல் பலரும் அவதியுற்ற நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.