தமிழகத்தில் மேலும் 39 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று(ஏப்ரல்-20) 31 பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில் இன்று மேலும் 39 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகியுள்ளது.
38 மாவட்டங்களில் 10 மாவட்டங்களில் மட்டுமே புதிதாக தொற்று பதிவாகியுள்ளது.
மேலும், இன்று சென்னையில் மட்டும் கரோனாவால் 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.