தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

அனைத்து ஊராட்சிகளிலும் மே 1-ல் கிராம சபைக் கூட்டம்

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் மே 1ஆம் தேதி காலை 10 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

News image
Updated On :27 ஏப்ரல் 2022, 5:05 pm

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் மே 1ஆம் தேதி காலை 10 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

இதில், வரவு, செலவு கணக்குகள் பல்வேறு திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு குறித்து விவாதிக்கப்படவுள்ளது. 

தமிழகத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும், தொழிலாளர் தினமான மே 1ஆம் தேதியன்று கிராம சபை கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. இதில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், சுகாதாரம் (பள்ளி கழிப்பறைகள் மற்றும் அங்கன்வாடி) போன்றவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. 

கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், முதல்வரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம், பிரதமர் குடியிருப்பு திட்டம் (ஊரகம்) குறித்த விளக்க உரையும் பொதுமக்கள் மத்தியில் விவாதிக்கப்பட உள்ளது. கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.