/

'காலத்தினால் செய்த நன்றி': ஊடகத் துறையினருக்கு முதல்வர் பாராட்டு

சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை தீ விபத்தில் ஊடகத் துறையினரும் மீட்புப் பணியை மேற்கொண்டதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:05 am

DIN


சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை தீ விபத்தில் ஊடகத் துறையினரும் மீட்புப் பணியை மேற்கொண்டதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் இரண்டாவது டவர் பிளாக்கின் பின்புறத்தில் உள்ள கல்லீரல் அறுவை சிகிச்சைப் பிரிவில் தீ விபத்து ஏற்பட்டது. செய்தி சேகரிக்க சம்பவ இடத்துக்கு விரைந்த செய்தியாளர்கள் சிலர் அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

"சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஏற்பட்ட சிறிய தீவிபத்து குறித்து செய்தி சேகரிக்க வந்த இடத்தில், மனிதத்தால் உந்தப்பட்டு - நேரத்தின் அருமை உணர்ந்து - பல உயிர்களைச் சேகரித்துத் தந்துள்ளனர் நம் ஊடகத் துறை நண்பர்கள்!

காலத்தினால் செய்த நன்றிக்கு என் பாராட்டுகள்!"

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.